"அடடா.. என்ன மனுஷன்யா".. முன்னாள் CM-ஐ அசரடித்த ரஜினி.. சர்ப்ரைஸான நடிகர் பாலய்யா.. வைரல் வீடியோ

x

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் என்டி ராமாராவ். அவரின் நூறாவது ஆண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கண்ணபுரம் வந்தடைந்த ரஜினிகாந்த்துக்கு, என் டி ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ரஜினிகாந்த்தும் சந்திரபாபு நாயுடுவும் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்ததாக கூறப்படுகிறது. சந்திரபாபு சந்திக்க வரும்போது எந்த வித பாதுகாப்பும் இன்றி நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக வந்தது காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்