வரம்பு மீறிய செய்தி..கொந்தளித்த நடிகர் பிரித்விராஜ்

x

தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். அண்மையில் மலையாள திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், சோதனை முடிவில் நடிகர் பிருத்விராஜ் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதாக சில மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிருத்விராஜ், வரம்பு மீறி தனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்