கேரளாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..பெண் டாக்டர் தந்தைக்கு துக்கத்துடன் ஆறுதல் கூறிய நடிகர் மம்முட்டி

x

கேரளாவில் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் தந்தைக்கு, நடிகர் மம்முட்டி நேரில் ஆறுதல் தெரிவித்தார். கேரள மாநிலம் கொட்டாரக்காரா அரசு மருத்துமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர், பெண் மருத்துவர் வந்தனா தாஸை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வந்தனாவின் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்தநிலையில் வந்தனாவின் வீட்டிற்கு சென்ற நடிகர் மம்முட்டி, வந்தனாவின் தந்தைக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்