நடிகர் போண்டா மணி கூடவே இருந்து ரூ.1 லட்சத்தை சுருட்டிய இளைஞர் அதிரடி கைது |

x

நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அய்யப்பன்தாங்கல் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி, கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது ரசிகர் என்று கூறி, ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் உடல் நலம் விசாரிப்பது போல பழகி, மருத்துவமனையில் அவருக்கு உதவிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து, மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் நகைக் கடை ஒன்றில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியதாக, செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாதவி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, தேடப்பட்டு வந்த ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தினேஷ், தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்