சிட்லபாக்கம் ஏரியில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலியாக நடந்த ஆய்வு

x

தந்தி டிவி செய்தி எதிரொலியாக சிட்லபாக்கம் பெரிய ஏரியை அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் ஆய்வு செய்தனர். சிட்லபாக்கம் பெரிய ஏரியை சீரமைக்கும் பணிகள், கடந்த ஒரு வருடமாக நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் பணிகளை விரைந்த தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை, தந்தி டிவியில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, சுப்ரியா சாகு உள்ளிட்டோர் சிட்லபாக்கம் பெரிய ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது சந்தீப் சக்சேனா, ஏரியில் நிலுவையாக உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்