விபத்துகளை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

x

திருப்பதி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தியாகம் நடத்தப்பட்டது. திருப்பதி மலைப்பாதைகளில், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், மகா சாந்தியாகம் நடத்த தேவஸ்தான ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 30 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அருகே, தேவஸ்தான அர்ச்சகர்கள் மகா சாந்தியாகம் நடத்தினர். தொடர்ந்து, மலைப்பாதையில் உள்ள பல்வேறு இடங்களில் பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்