விஷச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்கு ஆட்சியரின் அதிரடி முடிவு | Chengalpattu | CBCID |

x

செங்கல்பட்டில், விஷச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்கில், இருவரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் கடந்த மே மாதம் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை, குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்