பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை போட்ட அதிரடி உத்தரவு | Transport

x

பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என, ஓட்டுநர் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், சென்னை மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை கட்டாயம் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும் எனவும்,

பயணிகளிடம் உரிய பயண சீட்டு அளித்து, சரியான பயண கட்டணங்களை வசூலிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய போக்குவரத்து துறை,

சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என, போக்குவரத்துத்துறை குறிப்பிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்