தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் செய்த செயல் - மானாமதுரையில் பரபரப்பு

x

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் வாகன மேற்கூரை மீது நின்று கொண்டும்,தொங்கிக் கொண்டும் மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டும் வாகனங்களில் செய்த அட்ராசிட்டிகள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொனில் உ.முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது .இந்நிலையில் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர் ,இந்நிலையில் இந்த விழாவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக செல்லும் மதுரை டு ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் வழியாக அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பசும்பொன் சென்ற இளைஞர்கள் வாகனங்கள் மேற்கூரை மீது ஏறிக்கொண்டும் சன்னல் படிகளில் தொங்கிக் கொண்டு கோசம் போட்டுக்கொண்டு மொபைல் போன்களின் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டு கத்திக்கொண்டே ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டனர்.

இந்த மாதிரி போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வாகனங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்