காதலனை மடக்கி போட நினைத்த பெண்ணின் முகத்தை சிதைத்த காதலி - சென்னையில் சினிமாவை விஞ்சிய பயங்கரம்

சென்னை மதுரவாயலில், காதல் விவகாரத்தில் பெண் ஒருவரின் முகத்தில் ஆசிட் வீசியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
x

மதுரவாயலை சேர்ந்த லேகா என்பவர் மீது, பெண் ஒருவர் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லேகா, அவரது தாயார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீசார், போரூரை சேர்ந்த ஐஸ்வர்யா, தீனதயாளன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஐஸ்வர்யாவின் காதலன் பார்த்திபன் என்பவரை லேகா காதலித்து வருவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து லேகா மீது ஆசிட் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யா, தீனதயாளன் இருவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்