லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு...மருத்துவர்கள் தந்த அதிர்ச்சி-தந்தி டிவி செய்தி எதிரொலியாக அதிரடி

x

தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி வள்ளிம்மாளுக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தி கடந்த இரு தினங்களுக்கு முன் தந்தி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், மருத்துவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மூதாட்டி வள்ளியம்மாள் காலை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுத்தம் செய்து, அறுவை சிகிச்சை செய்து மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்