விபத்து இல்லா புத்தாண்டு - "முக்கிய மேம்பாலங்களுக்கு தற்காலிக தடை"

x

சேலம் மாநகர் முழுவதும் புத்தாண்டையொட்டி ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையாளர்கள் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்