பள்ளி மாணவிகளிடம் சிஷ்மிஷம் - ஆய்வக உதவியாளரை புரட்டி எடுத்த பெற்றோர்கள் | Salem

x

சேலம் அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்ததாக கூரி ஆய்வக உதவியாளரை, பெற்றோர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கீரைபாப்பம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சிய ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் லேப் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருபவர் வீரவேல். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை கேலி செய்யும் விதமாக பாடல்களை பாடியும், சில்மஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மாணவிகள் பெற்றோர்களிடத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டத்தில், இது தொடர்பாக தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவதத்தில் வீரவேலை, பெற்றோர்கள் தாக்கியதால் பரபரப்பானது. இதையடுத்து, கிராம மக்களும் ஒன்று கூடி ஆய்வக உதவியாளரை சிறை பிடித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ஆய்வக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்