ஆபாசத்தின் மறுஉருவமாக நின்ற Inspector..மிரட்டல் விட்டும் மசியாத இளம் பெண்..

x

சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதோடு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலமும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்