காதலியை கொடூரமாக கொன்ற அப்தாப்.. திகார் சிறையில் அடைப்பு...24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிப்பு

x

காதலியை கொன்று, உடலை வனப்பகுதியில் வீசிய கொடூர வழக்கில் அப்தாப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடங்களுக்கு அப்தாப்பை அழைத்து சென்று விசாரித்து வரும் போலீசார், ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவதற்கு பயப்படுத்திய 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அப்தாப் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் அப்தாப் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கைதிகளுடன் பேச விடாமல் கட்டுப்பாடுகளுடன் அப்தாப் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்