"யூடியூப் பார்த்து கருக்கலைப்பு." வகுப்பறையில் இறந்து கிடந்த மாணவி-அருகில் கிடந்த 6 மாத கரு..!

x
  • நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த 11ம் தேதி வகுப்பறையில் ரத்த போக்குடன் உயிரிழந்தார்.
  • அவர் அருகில் ஆறு மாத கரு ஒன்றும் இருந்தது.
  • இது குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • அந்த மாணவி கருக்கலைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது யூடியூப் பார்த்து சொந்தமாக கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது மரணம் அடைந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  • மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
  • அவரைப் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்