"கலப்பு திருமணம் செய்த‌தால் ஒதுக்கி வைப்பு".."சாதி பெயரை கூறி மானபங்கம்" - டிஜிபி அலுவலகம் முன்பு தம்பதி தர்ணா

புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த‌துள்ளதாக கூறி, டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுச்சேரி பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, அபிராமி ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தார் வேலுவையும், அபிராமியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,மீனவரான வேலு, கடல் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளர்.

https://youtu.be/142mS-sdZlw

X

Thanthi TV
www.thanthitv.com