ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி - டீ பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்

x

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி - டீ பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்


ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியால், மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை 15 ரூபாயாக உயர்த்தப்போவதாக மாவட்ட காபி-டீ வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.


அந்த சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், பேசிய மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரேஸ், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம், தனியார் பால் நிறுவனங்களுக்கு நிகராக பால் விலையை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இதனால், மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலையை 3 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, ஆவின் பால் விலையை குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனாட்சி சுந்தரேஸ் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்