"ஆவினை பார்த்து மிரளும் தனியார் நிறுவனங்கள்" - அமைச்சர் நாசர்

x
  • பனிக்காலம் என்பதால் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், தமிழ்நாட்டில் இதுவரை தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
  • தூத்துக்குடி ஆவின் பால் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், சாலை விபத்து காரணமாக சில இடங்களுக்கு ஆவின் பால் தாமதமாக சென்றதாக தெரிவித்தார்.
  • பனிக்காலம் என்பதால் தற்போது இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என கூறிய அவர், தமிழ்நாட்டில் தற்போது வரை தட்டுப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்தார்.
  • ஆவின் இனிப்பு வகைகள் அதிக விற்பனையாவதை கண்டு, தனியார் நிறுவனங்கள் பயப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் நாசர், கோடை காலத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் தனி கவனம் செலுத்தி, அண்டை மாநிலங்களுக்கும் அதன் விற்பனையை எடுத்து செல்ல முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்