புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பில் கொத்தாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. சென்னையில் அதிர்ச்சி - பீதியில் குடியிருப்பு வாசிகள்

x
  • சென்னையை அடுத்த ஆவடி அருகே காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
  • அக்குடியிருப்பில் சுமார் 900 வீடுகள் வரை உள்ளன. அவற்றில் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
  • இந்நிலையில் காவலர் குடியிருப்பின் 5-வது மாடியில் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பாக்கியலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
  • அவர் பணிக்கு சென்று விட்ட நிலையில் கணவர் , குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் முன் அறையில் இருந்துள்ளனர்.
  • அப்போது படுக்கை அறையின் சிமெண்ட் மேற்கூரை முழுவதும் திடீரென பெயர்ந்து கட்டில் மேல் விழுந்தது .
  • அந்த அறையில் யாரும் இல்லாததால் nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  • புதிதாக கட்டப்பட்ட இக் குடியிருப்புக்கு அனைவரும் வந்து 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்