போலீசாரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த விவகாரம்...விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசி

மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தை

கட்சியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இடப்பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு காவல் நிலையம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன்

உதவி ஆய்வாளரை சாதி பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரனைபோலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பாஸ்கரனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

காவல் நிலையம் முன்பு சென்ற போது அவர்கள் போலீசாரை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் மீது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவானவர்களை கைது செய்ய எஸ்.பி தலைமையில் 7 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்