வேத மந்திரங்கள் வானை கிழிக்க கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித் திருவிழா.. நெல்லையப்பர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

x

திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்கமாக, கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்