காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பெண் பலியான விவகாரம் - ஆளுநருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

x

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் ஆளுநர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி சுல்தான் புரியில், பெண் ஒருவர் கார் மோதி சில கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆளுநர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பது ஆம் ஆத்மி கட்சியினரின் கோரிக்கையாகும்.

இதனை வலியுறுத்தி, ஆளுநர் இல்லம் முன்பு குவிந்த அக்கட்சியினர் போலீசாரின் தடுப்புகளை தள்ளியபடி உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்