ஆடி அம்மாவாசை - தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு

x

ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரையை முன்னிட்டு பாரத் கவுரவ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. உஜ்ஜைன், ஹரித்வார், வாரணாசியில் உள்ள கோவில்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி புறப்படும் ரயில், நெல்லை, மதுரை, தஞ்சை, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் பனாரஸ் வரை இயக்கப்பட உள்ளது. 12 நாட்கள் பயணிக்கும் இந்த ரயிலில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்