தினமும் பெண்கள் விடுதி முன் நின்று அசிங்கம் செய்யும் இளைஞர்.. தலைநகரை கொதிக்க வைத்த சம்பவம்

x

டெல்லியில் பெண்கள் விடுதியின் வெளியே நின்று அநாகரீக செயலில் இளைஞர் ஈடுபட்டது தொடர்பாக, காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டெல்லியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றின் அருகில் சாலையில் நின்றபடி, இரவு நேரங்களில், இளைஞர் ஒருவர் அநாகரீகமான செயலில் ஈடுபடுவதாக, டெல்லி மகளிர் ஆணையத்துக்கு இரண்டு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான இரு வீடியோக்களும் டெல்லி மகளிர் ஆணையருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கம் கேட்டு, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்