நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி வட்டாட்சியர் காலில் விழுந்து கதறிய இளைஞர் -திருப்பத்தூரில் பரபரப்பு

x

நாட்றம்பள்ளி அருகே இளைஞர் ஒருவர் உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தெக்குபட்டு பகுதியில் வண்டி வழி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அமல்படுத்த கோரி சிவ சக்திவேல் என்பவர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வட்டாட்சியர் குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்