2 ஆண்டுகளாக தளராது போராடி தெருவின் சாதி பெயரை மாற்றிய இளம் பெண் - நெகிழ்ச்சி சம்பவம்

x

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளம்பெண் அனுசுயா. அவர் வசிக்கும் தெருவின் பெயர் இந்திரா நகர் என்றபோதிலும், ஆவணங்களில் ஆதிராவிடர் தெரு என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. தனது தெருவின் பெயரை மாற்றக்கோரி கடந்த 2 ஆண்டுகளாக அனுசுயா பலமுறை மனுக்கள் அளித்த போதும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் ஆவணங்களை இணைத்து பல அரசு அலுவலகங்களுக்கு சென்று கோரிக்கைகள் முன்வைத்த நிலையில், அனுசுயாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 'ஆதி திராவிடர் தெரு' என்ற பெயர், இனி 'இந்திரா நகர்' என்று அழைக்கப்பட உள்ளது. அனுசுயாவின் அயராத முயற்சியால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்