மருத்துவம் படித்த இளைஞர் தற்கொலை - சென்னையில் சோக சம்பவம்

x

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இந்தியாவில் பணிபுரிவதற்கான் தேர்வுக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஜெயராஜ்.

இவரின் மனைவி ஜெயலட்சுமி, ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மகன் நவீன்குமார் ஜார்ஜியா நாட்டின் மருத்துவம் படித்து முடித்து விட்டு, இந்தியாவில் பணிபுரிவதற்கான ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் தேர்வுக்கு சென்னையில் இருந்தே பயிற்சி எடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென நவீன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்