இறந்தும் 8 பேர் உடலில் உயிர் வாழும் இளைஞர்.. கதறிய தாய்... கலங்கடிக்கும் காட்சி

x

சேலத்தில் விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன...

சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், கடந்த 30 ஆம் தேதி பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி படுகாயமடைந்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு அவரது தந்தையிடம் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர், அவரது ஒப்புதலை தொடர்ந்து, சென்னைக்கு இதயம் மற்றும் நுரையீரலும், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகமும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆம்புலன்ஸில் உறுப்புகள் எடுத்துச்செல்லும் போது அந்த பெட்டிகளை கட்டிப்பிடித்து உறவினர் கதறிய காட்சிகள் பார்ப்போரை கலங்கடித்தது.


Next Story

மேலும் செய்திகள்