அமெரிக்க மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்....காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் கைது

x

புதுச்சேரியில், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், காஷ்மீரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்கா-நியூ ஜெர்சியை மாகாணத்தைச் சேர்ந்த பத்ரிசியா போஃல்டஸ் என்ற மூதாட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு, காஷ்மீரைச் சேர்ந்த மேஹ்ராஜ் பாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பத்ரிசியா, மேஹ்ராஜ் பாத்திடம் சில உதவிகள் கேட்டுள்ளார். இதனையடுத்து. பத்ரிசியா தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு சென்ற மேஹ்ராஜ், அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்