உடுமலையில் நகர்மன்ற தலைவரை கொலை செய்ய இருப்பதாக, அரிவாளுடன் காவல்நிலையத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு

x

உடுமலையில் நகர்மன்ற தலைவரை கொலை செய்ய இருப்பதாக, அரிவாளுடன் காவல்நிலையத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில், அவர் பழனியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்று தெரியவந்தது.

நகர்மன்ற தலைவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், 5 பேர் வேனில் சுற்றி வருவதாகவும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசார் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து நகர்மன்ற தலைவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து, ஷேக் அப்துல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்