பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல்..! தனி தனியாக கிடந்த மண்டை ஓடு, விரல்கள் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

x

டெல்லியில், துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களுடன் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் உள்ள கட்டுமான தளம் அருகே, பிளாஸ்டிக் பையில் சிதைந்த நிலை​யில்​பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார், பிளாஸ்க் பையை சோதனை செய்தபோது, அதில், மண்டை ஓடு, விரல்கள், உடல் பாகங்களின் எலும்புகள் மற்றும் கொத்து கொத்தாக முடி இருந்துள்ளது. பெண்ணின் உடலாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட பாகங்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் அடைத்து அப்புறப்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்