பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த பெண்..6 மணி நேரமாக காத்திருப்பு - அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பாம்பு கடித்து சிகிச்சைக்காக வந்த பெண்ணை, அரசு மருத்துவமனையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.இசக்கியம்மாள் என்பவர் வயலில் வேலை பார்த்தபோது பாம்பு கடித்துள்ளது. பின்னர் உடனடியாக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாததால், 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு இசக்கியம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்