திடீரென புகுந்து தாக்கிய காட்டு யானை - எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

x

கர்நாடகா மாநில எல்லையான பன்னர்கட்டா வனப்பகுதி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, பயிற்சி மையத்திற்குள் புகுந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு வீரரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த வீரரின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை


Next Story

மேலும் செய்திகள்