மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டு யானை - குன்னூரில் பரபரப்பு

x

குன்னூர் மலைபாதையில் உலா வந்த காட்டுயானையை, வனத்துறையினர் அரைமணி நேரம் வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையிலுள்ள இச்சிமரம் பகுதியில், ஒற்றை காட்டுயானை யானை ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில், வனத்துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்