தகாத உறவில் இருந்த மனைவி...மீண்டும் கணவருடன் சென்ற காதலி - ஆத்திரத்தில் காதலியின் மகனை கொன்ற காதலன்

x
  • தகாத உறவில் தகராறு ஏற்பட்டு மீண்டும் தனது கணவருடனே வந்து வாழ்ந்த பெண்ணின் 17 வயது மகனை, காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
  • .சென்னை, விருகம்பாக்கம் அருகே தாங்கல் ஏரிக்கரையை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவருக்கு தனலட்சுமி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், தனலட்சுமிக்கு வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
  • இதனால், கணவரை பிரிந்த தனலட்சுமி கார்த்திக்குடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், தகாத உறவில் திடீரென தகராறு ஏற்படவே, கார்த்திக்கை விட்டு பிரிந்த தனலட்சுமி, மீண்டும் தன் கணவரிடமே திரும்பி வந்துள்ளார்.
  • இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் தனலட்சுமியை அழைத்து வர அவரது கணவரின் வீட்டுக்கு சென்ற போது, தனலட்சுமியின் 17 வயது மகனுக்கு, கார்த்திக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை குத்தி விட்டு கார்த்திக் தப்பியோடியுள்ளார்.
  • இதில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்