"யாரு சாமி இவன்" 'அந்நியன்' பட விக்ரமை போல் மாறி மாறி பேசி மிரட்டல் - தீயாய் பரவும் இளைஞரின் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மதுபோதையில் தகராறு செய்த இளைஞர், அந்நியன் பட விக்ரமை போல் நடவடிக்கைகளை மாற்றி மாற்றி மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இரணியல் அருகே செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷ். இவர் மதுபோதையில் அருகில் வசித்து வந்த கூலித்தொழிலாளி முருகனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், முருகன் பணம் கொடுக்க மறுத்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர், வீட்டின் முகப்பை அடித்து நொறுக்கியதாகவும், வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை வெட்டி கொன்றதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இளைஞர் அபிஷை கைது செய்த நிலையில், தகராறின் போது அந்நியன் விக்ரமை போல இளைஞரை நடவடிக்கைகளை மாற்றி மாற்றி மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Next Story