தேநீர் கடைக்குள் பாய்ந்த வாகனம்.. டீ குடித்திருந்த நபர் உடல் நசுங்கி பலி - வெளியான சிசிடிவி காட்சி

x

பல்லடம் அருகே சாலையோர கடைக்குள் சரக்கு வாகனம் புகுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற சரக்கு வாகனம் ஒன்று, கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தேனீர் கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் மேற்கூரைகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணியன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தின் ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த போலீசார், ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் விபத்தின் சிசிடிவி காட்சியும், பொதுமக்கள் சரக்கு வாகனத்தின் ஓட்டுனரை தாக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்