திடீரென டயர் வெடித்து கவிழ்ந்த வேன் - நடுரோட்டில் நடந்த விபரீதம்

x

மதுரையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் அருப்புக்கோட்டை அருகே உள்ள, குலதெய்வம் கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, காரியாபட்டி அருகே திடீரென வேன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேன் சாலையில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் வேன் ஓட்டுநர், பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்