ரயில்வே கேட்டில் சிக்கிக் கொண்ட வேன் - திணறிய ஓட்டுனர் ... பதறிய பயணிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே கேட்டில் மினி வேன் சிக்கி கொண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட்டில் வேன் ஒன்று சிக்கிகொண்டது.

இரு புறமும் வேனை இயக்க முடியாமல் ஓட்டுனர் திணறியதால், ரயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் வேனில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேன் மீட்கப்பட்டது.

இதனால் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்