19 பேருடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கதற கதற கடத்திய காதலன் - விக்ரவாண்டி டோல்கெட்டில் நடந்த ட்விஸ்ட்

x

மயி லாடுதுறையில் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கடத்திச்சென்ற வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சாசமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரனும், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். இருப்பினும் விக்னேஸ்வரன், அந்த பெண்ணை பின்தொடர்ந்ததோடு,அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இதுதொடர்பாக 2 முறை போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் அப்பெண்ணை கடத்த விக்னேஸ்வரன் முயற்சித்துள்ளார்.

அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் விக்னேஸ்வரன், தனது கூட்டாளிகளோடு ஆயுதங்களுடன் சென்று , அந்த பெண்ணை மீண்டும் காரில் கடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விக்ரவாண்டி டோல்கேட்டில் காரை மடக்கி பெண்ணை மீட்டனர்.

மேலும் விக்னேஷ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்