ஹீட்டரில் வெந்நீர் வைத்த போது வீரருக்கு நேர்ந்த விபரீதம்

x

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி ஊர்காவல் படை வீரர் உயிரிழந்தார்.

கேத்தாண்டப்பட்டி அருகே உள்ள கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஆஞ்சநேயன், கந்திலி காவல்நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை குளிப்பதற்காக வீட்டில், ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுபடுத்தியுள்ளார்.

அப்போது, தண்ணீரில் கை வைத்தபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நாட்றம்பள்ளி காவல்நிலைய போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்