போராட்டத்தின் நடுவே திடீரென தீக்குளித்த சுங்கச்சாவடி ஊழியர் - பணி நீக்கம் செய்ததால் விபரீத முடிவு

x

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில், 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும், கடந்த ஒரு மாத காலமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுங்கச்சாவடியில் பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் கோபால் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கோபாலின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்