சாலையில் சென்ற டிப்பர் லாரி... தானாக இயங்கிய ஹைட்ராலிக் டிரைலர் - மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

x

சிவகங்கை காந்தி வீதியில் டிப்பர் லாரியை ஓட்டுநர் திருப்பியுள்ளார்... அப்போது டிப்பர் லாரியில் இருந்த ஹைட்ராலிக் தானாக இயங்கி ட்ரைலரை தூக்கியதில், சாலையின் குறுக்காக சென்ற மின்கம்பி பிடித்து இழுக்கப்பட்டுள்ளது. இதில் அருகில் இருந்த 3 மின்சார கம்பங்கள் முறிந்ததுடன், உயர் மின் அழுத்த கம்பிகளும் அறுந்து தரையிலும் வாகனங்கள் மீதும் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. மின் கம்பிகள் அறுந்ததால் மின் தடை ஏற்பட்டு லட்சக்கணக்கான மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து மின் வாரிய உயரதிகாரிகளுக்கு தகவல் கூறவே, மின் துறை ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்