தாய், மகன் மீது விழுந்த இடி - ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசத்தில் இடி விழுந்து பெண் ஒருவர் உயிரழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னூர் ரெட்டியார் தெருவை சேர்ந்த அலமேலு என்பவர், தனது மகன் குமரனுடன் விவசாய வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென வானம் மேகமூட்டமாக மாறி இடி இடித்துள்ளது. இதில், இடி விழுந்த‌தில், அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமரன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்