திருவிடைமருதூர் அருகே மூன்று தலைமுறை கண்ட மூதாட்டி, குடும்பத்தினரோடு சிறப்பாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

x

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் காந்தி நகரில் வசிக்கும் மூதாட்டி ஜெயலட்சுமி. 1923 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, 12 பேத்தி பேரன்களும்,19 கொள்ளு பேத்தி பேரன்களும், 7 எள்ளுப்பேரன்களும் உள்ளனர். இவ்வாறு 3 தலைமுறைகளை கண்ட இவர், தனது100வது பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடியுள்ளார். இந்த வயதிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ள அவர், தன் வேலைகளை தானே செய்துகொள்வது மட்டுமின்றி, பட்டு நூலை தார் சுற்றியும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். குடும்பத்தினர் தன்னை நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் ஜெயலட்சுமி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். 100 வயதிலும்ஆரோக்கியமாக இருக்கும் ஜெயலட்சுமியை, அப்பகுதி மக்கள் கண்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்