திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதிக்கு பரிசாக அளிக்கப்பட்ட மூன்றடி உயர வெள்ளி பேனா சிலை

x

ஆலங்குடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மூன்றடி உயரத்திலான வெள்ளி பேனா சிலை பரிசளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திமுக நிர்வாகி ரத்தினவேல் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது அவருக்கு ரத்தினவேல் குடும்பத்தினர் சார்பாக, மூன்றடி உயரத்திலான வெள்ளி பேனா சிலை பரிசளிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக அளிக்கப்பட்ட பேனா சிலையினை, உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்