காவலர் குடியிருப்பிலேயே கைவரிசை... பைக்கைத் திருடிச் சென்ற மர்ம ஆசாமி

x

காவலர் குடியிருப்பிற்குள்ளேயே புகுந்து திருடன் ஒருவன் பொறுப்பாக தலைக்கவசம் அணிந்து கொண்டு பைக்கைத் திருடிச் சென்ற சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது... செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இவரது வாகனத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் சென்றுள்ளார்... திருடுவது போலீஸ் வாகனம் என்பதாலோ என்னவோ, பயத்தில் மிகுந்த பொறுப்புடன் அந்தத் திருடன் ஹெல்மெட் அணிந்து வண்டியைத் திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்