யானையை விரட்ட முயன்ற வாலிபர் - கொடூரமாக மிதித்து கொன்ற காட்டு யானை..

x

அசாம் மாநிலத்தில் காட்டு யானை மிதித்து இளைஞர் உயிரிழந்தார். பெஹாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஹ்மாரி என்ற இடத்தில், கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த யானையை விரட்ட முயன்ற கணேஷ் ஹெம்ரோன் என்ற இளைஞரை அந்த யானை மிதித்து கொன்றது. இந்நிலையில், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து வனத்துறையினர் தங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்