நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்.. வெளியில் வந்து பார்த்த மக்கள் அதிர்ச்சி

x

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் வெடி குண்டு சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அலறியடித்த மக்கள் வெளியில் வந்து பார்த்த இப்பொழுது வெடிகுண்டுகள் வீசப்பட்டது தெரியவந்தது.

இதுக்குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

கிராமத்தில் ஆறு இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், பல வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

நள்ளிரவில் வெடி குண்டு விசப்பட்ட சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்